பாடல் #1259

பாடல் #1259: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

ஞாலம தாக விரிந்தது சக்கரம்
ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும்
ஞாலம தாயிடு மப்பதி யோசனை
ஞாலம தாக விரிந்தது எழுத்தே.

விளக்கம்:

பாடல் #1258 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து மேலெழுந்து வந்து உலகமாகவே விளங்குகின்ற ஏரொளிச் சக்கரமானது அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்து உலகங்களாகவும் ஆகி விடுகின்றது. அந்த சக்கரத்தோடு வெளிச்சமும் சத்தமும் இறை சக்தியும் எழுத்து வடிவமும் ஒன்றாகச் சேரும் பொழுது அதிலிருந்து வெளிப்படும் எழுத்தானது பல விதமான உலகங்களாக விரிந்து சிந்திக்க முடியாத அளவு பல யோசனை தூரத்திற்கு பரவுகின்றது.

One thought on “பாடல் #1259

Leave a Reply to Anandavely EloornayagamCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.