பாடல் #1264

பாடல் #1264: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

அம்முத லாறுமவ் வாதி யெழுத்தாகும்
அம்முத லாறுமவ் வம்மை யெழுத்தாகும்
இம்முதல் நாலு மிருந்திடு வன்னியே
இம்முத லாகு மெழுத்தவை யெல்லாம்.

விளக்கம்:

பாடல் #1265 இல் உள்ளபடி சிவசூரியனின் நிலையை அடையக் காரணமான ஒரு எழுத்தே ஆதியான பரம்பொருளைக் குறிக்கின்ற எழுத்தாகும். சாதகருக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களிலும் இருக்கின்ற எழுத்துக்களுக்கு இந்த ஒரு எழுத்தே முதன்மையானதாக இருக்கின்றது. சாதகருக்குள் இருக்கும் ஆறு ஆதார சக்கரங்களிலும் இருக்கின்ற எழுத்துக்கள் இறைவியின் சக்தி மயத்தைக் குறிக்கின்ற எழுத்துக்களாகும். இந்த ஆறு ஆதாரச் சக்கரங்களில் முதலில் இருக்கின்ற நான்கு சக்கரங்களுக்கு (மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம்) நடுவில் (மணிப்பூரகத்திற்கும் சுவாதிஷ்டானத்திற்கும்) இருக்கின்ற தொப்புள் கொடியில் அக்னி வீற்றிருக்கின்றது. இந்த அக்னியிலிருந்தே ஏரொளிச் சக்கரத்தில் இருக்கும் நூற்று நாற்பத்து நான்கு எழுத்துக்கள் எல்லாம் வெளிப்படுகின்றன.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.