பாடல் #1262

பாடல் #1262: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

ஆகாச வக்கர மாவது சொல்லிடில்
ஆகாச வக்கரத் துள்ளே யெழுத்தவை
ஆகாச வவ்வெழுத் தாகிச் சிவானந்தம்
ஆகாச வக்கர மாவ தறிமினே.

விளக்கம்:

பாடல் #1261 இல் உள்ளபடி ஆகாசத்தின் தன்மையாக மாறிய எழுத்தின் வடிவமாக ஏரொளிச் சக்கரம் மாறுவது எப்படி என்று சொல்லப் போனால் பாடல் #1257 இல் உள்ளபடி ஏரொளிச் சக்கரத்தின் உள்ளே இருக்கின்ற நூற்று நாற்பத்து நான்கு எழுத்துக்களும் ஆகாசத் தன்மையில் இருக்கின்ற ஒரு எழுத்துக்குள்ளேயே அடங்கி இருக்கின்றது. ஆகாசத் தன்மையில் இருக்கும் எழுத்து வடிவமே பிறகு ஓர் எழுத்தாகி கிடைப்பதற்கு அரிய மிகப்பெரும் சிவானந்தத்தைக் கொடுக்கின்றது. ஆகாசத் தன்மையில் இருக்கும் எழுத்து வடிவமே ஓர் எழுத்தாக எப்படி மாறி சிவானந்தத்தைக் கொடுக்கின்றது என்று அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.