பாடல் #1288

பாடல் #1288: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

தெளிந்திடும் சக்கர மூலத்தி னுள்ளே
யளிந்த வகாரத்தை யந்நடு வாக்கிக்
குளிர்ந்த வரவினைக் கூடியுள் வைத்து
வளிந்தவை யங்கெழு நாடிய காலே.

விளக்கம்:

பாடல் #1287 இல் உள்ளபடி சாதகர்கள் தமக்குள்ளேயே தேடி தெளிந்து கொண்ட ஏரொளிச் சக்கரத்தின் ஆதாரமான மூலாதாரத்திற்கு உள்ளே தமது ஏரொளிச் சக்கர சாதகத்தினால் அருளாகக் கிடைத்த ஓங்கார மந்திரத்தின் அகாரத்தை நடுவில் வைத்து அமைக்க வேண்டும். சாதகருக்குள்ளிருந்து வெளிவந்து அண்ட சராசரங்கள் முழுவதும் பரவி அங்குள்ள அனைத்து உலகத்தில் இருக்கின்ற உயிர்களுக்கும் அருளுவதற்கான சக்தியைப் பெறுவதற்கு மீண்டும் சாதகரின் உள்ளுக்குள் வருகின்ற எப்போதும் மாறாத சுழற்சியை செய்து கொண்டிருக்கும் குண்டலினி சக்தியோடு அந்த அகாரத்தை ஒன்றாகச் சேர்த்து அதற்கு உள்ளே வைத்தால் கிடைக்கும் அமைப்பிலிருந்து எழுகின்ற மந்திரத்தில் ஒரு ஒரு நாழிகையின் சிறிய அளவாகிய கால் பங்கு அளவு கிடைக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.