பாடல் #1263

பாடல் #1263: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

அறிந்திடும் சக்கர மையைந்து விந்து
அறிந்திடும் சக்கரம் நாத முதலா
அறிந்திடும் அவ்வெழுத் தப்பதி யோர்க்கும்
அறிந்திடும் அப்பக லோனிலை யாமே.

விளக்கம்:

பாடல் #1262 இல் உள்ளபடி சாதகர் அறிந்து உணர்ந்து கொண்ட ஏரொளிச் சக்கரத்தில் இருக்கின்ற ஐந்து பூதங்களின் தன்மைகளும் ஐந்து மடங்கு பெருகி வெளிச்சமாகின்றது. இந்த ஏரொளிச் சக்கரத்தில் இருக்கின்ற அனைத்து தன்மைகளுக்கும் முதலாக சத்தமே இருக்கின்றது. ஏரொளிச் சக்கரத்திலிருக்கும் ஐந்து தன்மைகளும் வெளிச்சமும் நாதமும் ஒன்றாகச் சேர்ந்து மாறிய ஓர் எழுத்தே இறை நிலையில் தலைவர்களாக இருக்கின்ற தெய்வங்களாகவும் இருக்கின்றது. இதை முழுவதும் அறிந்து உணர்ந்து கொண்ட சாதகர் பேரொளியாகிய சிவசூரியனின் நிலையை அடைந்து விடுவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.