பாடல் #1270

பாடல் #1270: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

இராசியுட் சக்கர மெங்கும் நிறைந்தபின்
இராசியுட் சக்கர மென்றறி விந்துவாம்
இராசியுட் சக்கரம் நாதமு மொத்தபின்
இராசியுட் சக்கரம் நின்றிடு மாறே.

விளக்கம்:

பாடல் #1269 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து மேலெழுந்து வெளிப்படும் சக்கரமே காலங்கள் அனைத்துமாகவும் இருக்கின்றது. இப்படி காலமாகவே இருக்கின்ற ஏரொளிச் சக்கரம் அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்து உலகங்களிலும் நிறைந்த பிறகு சக்கரம் என்று அறியப்படுவது வெளிச்சமாகும். இந்த வெளிச்சத்தோடு சத்தமும் ஒன்றாகச் சேர்ந்த பிறகு ஏரொளிச் சக்கரமாகவே காலங்கள் இருக்கின்ற வழியாக வெளிச்சமும் சத்தமும் இருக்கின்றது.

குறிப்பு: காலப் பயணத்தை செய்யக்கூடிய சாதகர்கள் வெளிச்சமாகவும் சத்தமாகவுமே செல்கிறார்கள் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.