பாடல் #450

பாடல் #450: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

ஆரும் அறியாதவ் வண்டத் திருவுருப்
பார்முத லாகப் பயிலுங் கடத்திலே
நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமற் காணும் சுகமுமறிந் தேனே.

விளக்கம்:

யாராலும் அறிந்துவிட முடியாத அண்டசராசரங்கள் அடங்கிய திருமேனியைக் கொண்ட இறைவன் நீரில் பால் சேர்க்கும் போது எப்படி இரண்டும் ஒன்றாகிக் கலந்து விடுகின்றதோ அதுபோலவே உலகத்தில் பிறக்கும் உயிர்களுடன் உயிராகக் கலந்து உடலாகி ஒன்றாக இருப்பதை இடைவிடாமல் கண்டு பேரின்பம் அடையும் பாக்கியத்தை அவனது திருவருளால் யான் பெற்றிருக்கின்றேன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.