பாடல் #449

பாடல் #449: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்
விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்
மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்
கண்ணின்ற மாமணி மாபோதக மாமே.

விளக்கம்:

உயிர்களின் உள்ளத்திற்குள் ஒளியாக இருக்கும் இறைவனே உயிரோடு உயிராகவும் கலந்து ஒரே உடலாக இருக்கின்றான். அவனே விண்ணுலக அமரர்களெல்லாம் விரும்பித் தொழும் அனைத்திற்கும் மேலான பரம்பொருள். அவனே மண்ணுலக அடியவர்களெல்லாம் புகழ்ந்து போற்றும் பல்வேறு உருவங்களாகத் திருமேனி தரித்து இருப்பவன். அவனே கண்களுக்குள் இருந்து காட்சியைக் காட்டும் கருமணியாகவும் இருந்து கண்களால் காண முடியாத பேருண்மைகளைக் குருநாதனாய் இருந்து போதிப்பவனும் ஆவான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.