பாடல் #401

பாடல் #401: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில்
அளியார் திரிபுரை யாம்அவள் தானே
அளியார் சதாசிவ மாகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே.

விளக்கம்:

பரவிந்து, அபரநாதம், அபரவிந்து எனும் மூன்று முக்கோணம் போன்ற ஒளி ஒலியாகிய அசையும் சக்தியின் மையப்பகுதியில் இருந்து திரிபுரை என்ற பெயருடைய சக்தி தோன்றுவாள். அவளே சதாசிவமூர்த்தியின் தொழிலை செயல்படுத்துவாள். அவளது மாபெரும் கருணையினால் சிவன், மகேசுவரன், உருத்திரன், திருமால், பிரம்மன் ஆகிய ஐந்து மூர்த்திகளின் சக்தியாக உடன் இருந்து அருளல், மறைத்தல், அழித்தல், காத்தல், படைத்தல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்வாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.