பாடல் #404

பாடல் #404: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉட லோடுயிர் தானே.

விளக்கம்:

ஏழு உலகங்களையும் படைக்கின்ற பிரம்மனாகவும் ஏழு உலகங்களையும் காக்கின்ற திருமாலாகவும் ஏழு உலகங்களையும் அழிக்கின்ற சிவபெருமானாகவும் இருப்பவன் இறைவன் ஒருவனே. சதாசிவமூர்த்தியாக இருந்து ஒவ்வொரு உயிரின் உடலோடு உயிராக கலந்து இருப்பவனும் இறைவன் ஒருவனே.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.