பாடல் #381

பாடல் #381: இரண்டாம் தந்திரம் – 9. சர்வசிருஷ்டி (அண்டங்கள் அனைத்தும் உருவாகிய முறை)

ஆதியோ டந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்
தீதில் பரையதன் பால்திகழ் நாதமே.

விளக்கம்:

முதலும் முடிவும் இல்லாத பரம்பொருள் அசையா சக்தியாகிய பராபரமாக இருக்கிறார். அறிவு வடிவாக இருக்கும் அந்த பராபரத்தில் உலகை படைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதும் அசையும் சக்தியாகிய பராபரை உருவாகிறது. அசையும் சக்தி உருவானதும் அதிலிருந்து சோதி உருவாகிறது. அந்த சோதியில் இருந்து ஒலி உருவாகிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.