பாடல் #285: முதல் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்
கண்டேன் கமழ்தரு கொன்றையி னானடி
கண்டேன் கரியுரி யான்றன் கழலிணை
கண்டேன் கமல மலருறை வானடி
கண்டேன் கழலதுஎன் அன்பினுள் யானே.
விளக்கம்:
சுகந்தமான வாசனை கொண்ட கொன்றை மலர்களைச் சூடியிருக்கின்றவனின் திருவடிகளை யான் கண்டு கொண்டேன். அறியாமையாகிய யானையை கதறும்படி பிளந்து அதன் தோலை உரித்துப் போர்வையாக தன் மேல் போர்த்திக்கொண்டவனின் காதிலிருக்கும் அழகிய கழல்களை யான் கண்டு கொண்டேன். சகஸ்ரர தளத்தில் ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் இறைவனின் திருவடிகளை யான் கண்டு கொண்டேன். இறைவனின் மேல் யான் கொண்ட பேரன்பால் அழகிய கழல்களை அணிந்து அன்பே உருவாமாய் நின்ற அவனது திருமேனியை யான் கண்டு கொண்டேன்.
