பாடல் #231

பாடல் #231: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பது யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடையம்விட் டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரனுண்மை இன்றிஊன்
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே.

விளக்கம்:

சத்தியத்தின் வழி நடக்காமலும் தன்னை உணரும் ஞானமும் இல்லாமலும் உடலோடு வந்த இந்திரியங்களின் வழி வரும் ஆசைகளை விட்டு விலகி நடக்காமலும் உண்மையான மெய்ஞான உணர்வில்லாமலும் இறைவனின் மேல் பக்தியில்லாமலும் உண்மைப் பொருள் இறைவன் ஒருவனே என்பதை உணராமலும் நிலையில்லாத உடலின் மேல் கொண்ட ஆசையினால் இந்திரியங்கள் வழியே வாழுகின்ற முட்டாள்கள் பிராமணர் என்று தன்னை கூறிக்கொள்ள தகுதியில்லாதவர்கள் ஆவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.