பாடல் #224

பாடல் #224: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பது யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தம்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.

விளக்கம் :

அந்தணர் என்பவர் வேதங்களை ஓதுதல். கற்ற வேதங்களை பிறருக்கு கற்றுக்கொடுத்தல். வேத முறைப்படி யாகம் வளர்த்தல். பிறருக்கு யாகம் செய்யும் முறையை கற்றுக்கொடுத்தல். தானம் கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தானம் தருதல். பிறரிடமிருந்து தானம் பெறுதல் ஆகியவற்றை செய்பவர்களே அந்தணர்கள் ஆவார்கள். அதுமட்டுமின்றி 1.தூய்மையாக இருத்தல் 2. இறையருளோடு இருத்தல் 3. அளவான உணவு 4. பொறுமையோடு இருத்தல் 5. நேர்மையுடன் இருத்தல் 6. பொய் பேசாது சத்தியத்தைக் கடைபிடித்தல் 7. சத்தியத்திற்காக வைராக்கியத்தை வளர்த்தல் 8. காமத்தை எண்ணாதிருத்தல் 9. களவு (திருடு) எண்ணாமலிருத்தல் 10. கொலை எண்ணாமலிருத்தல் ஆகிய பத்து குணங்களையும் தானும் அறிந்து பிறர் அறித்துகொள்ளச் செய்து நியமத்தின் வழி நடக்க வேண்டும். தாம் கடைபிடிக்கும் தவத்திலும் நல்ல காரியங்களைச் செய்யும் கருமங்களிலிருந்தும் எப்போதும் தவறாமல் நின்று நல்லது தீயது ஆகிய அனைத்து சடங்குகளையும் பிறருக்காக செய்து கொடுப்பவர்களே அந்தணர்கள் அவர்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.