பாடல் #238

பாடல் #238: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனின் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம்ஓரான் கொல்என்பான்
நல்லாரைக் காலன் நணுகவும்நில் லானே.

விளக்கம்:

கல்வி அறிவு இல்லாத அரசனும் உயிர் எடுப்பதில் எமதர்மனுக்குச் சமமானவன். ஆனாலும் கல்வி அறிவு இல்லாத அரசனைவிட எமதர்மன் மிகவும் நல்லவன். ஏனென்றால் கல்வி அறிவு இல்லாத அரசன் அறம் எது, நீதி எது என்று ஆராயாமல் குற்றம் சாற்றப்பட்டவரை உடனே கொன்றுவிடு என்று கட்டளையிட்டு விடுவான். ஆனால் எமதர்மனோ நல்லவர்களின் பக்கத்தில் நிற்கவும் தயங்கி அவர்களின் காலம் முடியும் வரை காத்திருப்பான்.

2 thoughts on “பாடல் #238

  1. Suganthi Reply

    இசையுடன் கூடிய பாடல் பதிவு மிக அருமை

Leave a Reply to SuganthiCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.