பாடல் #246

பாடல் #246: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.

விளக்கம்:

பிராணாயாமப் பயிற்சியின் மூலம் மூச்சுக்காற்றை உள்ளே அடக்கி மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியை சுழுமுனை நாடி வழியே மூச்சுக்காற்றின் மூலம் தலை உச்சியின் மேலேற்றி சகஸ்ரரதளத்தில் வீற்றிருக்கும் இறைவனின் நிலவைப் போன்ற திருமுகத்தைக் கண்டு தரிசித்து பிறகு குண்டலினி சக்தியை புருவ மத்தியில் இருக்கும் ஆஞ்சை சக்கரத்தில் கொண்டு வந்து இறக்கி அதன் பிறகு அங்கே இருக்கும் அமிர்தத்தை இறைவனை நினைத்து பருகாமல் புத்தி மயக்கத்தின் மேல் மோகம் கொண்டு பனை மரத்திலிருக்கும் கள்ளை இறக்கித் தினமும் பருகி அந்த மயக்கத்திலேயே இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களுக்குத் தக்க தண்டனை அளித்துத் திருத்த வேண்டியது நாட்டை ஆளும் அரசனது கடமையாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.