பாடல் #243

பாடல் #243: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

ஆவையும் பாவையும் மற்றற வோரையும்
தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவா தொழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே.

விளக்கம்:

பால் தரும் பசுக்களையும் பெண்களையும் அற நெறி உணர்ந்த சான்றோரையும் வானுலகத்து தேவர்கள் போற்றுகின்ற ஞானத்தை உணர்ந்து அதைக் குறிக்கும் வேஷத்தை தரித்த ஞானிகளையும் அவர்கள் வாழும் நாட்டிற்கு காவலனாக விளங்கும் அரசன் அவர்களைக் காத்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அவர்களை காப்பாற்றவில்லை என்றால் அவன் இறந்தபின் இன்னுமொரு பிறவி எடுக்க முடியாத அளவிற்கு எப்போதுமே தப்பிக்க முடியாத நரகத்தில் துன்பப்பட்டுக் கொண்டு கிடப்பான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.