பாடல் #105

பாடல் #105: பாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை

ஈசன் இருக்கும் இருவினைக் கப்புறம்
பீசம் உலகில் பெருந்தெய்வ மானது
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந்த் தார்களே.

விளக்கம்:

இறைவன் நல்வினை தீவினை ஆகிய இரண்டுமாகவே இருக்கிறான். அதையும் தாண்டி அவனை உணர வழிசெய்யும் ஓம் எனும் பிரணவ மந்திரமே இந்த உலகின் மிகப்பெரும் தெய்வமாக இருக்கின்றது. இது எதுவும் தெரியாமல் இறைவன் அதுதான் இதுதான் என்று பல்வேறாக நினைத்துக்கொண்டு அலைபவர்கள் மும்மலங்களின் மாசு படிந்து இருப்பதால் அதை அகற்றி உண்மைப் பொருளான இறைவனை உணராமலேயே இருக்கின்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.