பாடல் #106

பாடல் #106: பாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை

சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.

விளக்கம்:

சிவபெருமானே அனைத்தின் முதல்வனாய் படைத்தலில் பிரம்மன் காத்தலில் திருமால் அழித்தலில் உருத்திரன் என்கிற மூவராகவும் அவர்களோடு சேர்ந்து அருளலில் மகேசுவரன் மறைத்தலில் சதாசிவன் என்று ஐந்து பேராகவும் சிறப்பாக நின்று உயிர்களின் உடலிலுள்ள சக்திமயங்கள் (ஏழு சக்கரங்களும் அதைத் தாண்டிய பரவெளியும்) அனைத்திலும் ஒன்றோடு ஒன்றாக கலந்து இருக்கின்றார். இவர்கள் அனைவருக்கும் மூலமாகிய பரம்பொருள் சதாசிவமூர்த்தியே ஒளியும் ஒலியுமாய் ஓங்கிப் பரவெளியில் அனைத்திற்கும் முதலாகிய சங்கரன் எனும் பெயரில் ஒருவராக இருக்கின்றார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.