பாடல் #110

பாடல் #110: பாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை

சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்ற
ஆதிக்கண் ஆவ தறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே.

விளக்கம்:

ஒளி விடுகின்ற பேரொளிப் பிழம்பான சிவமே படைத்தலில் பிரம்மன் காத்தலில் திருமால் அழித்தலில் உருத்திரன் என்கின்ற மூவராகவும் அவர்களோடு அருளலில் மகேசுவரன் மறைத்தலில் சதாசிவன் என்று ஐந்து பேராகவும் நின்று அந்தத் தொழில்களை செய்துவருவதும் அந்தச் சிவமே ஆதியிலிருந்து இருக்கின்ற பரம்பொருள் என்பதை அறியாத மூடர்கள் அவர்கள் செய்யும் தொழிலை வைத்து அவர்களை வேறு வேறு தெய்வங்களாகக் கருதிக்கொண்டு அவர்களில் யார் பெரியவர் யார் சிறியவர் என்று வீணாகச் சண்டையிட்டுக்கொண்டு புலம்புகின்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.