பாடல் #1025

பாடல் #1025: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

முக்கணன் றானே முழுச்சுட ராயவன்
அக்கணன் றானே அகிலமும் உண்டவன்
திக்கண னாகி திசையெட்டுங் கண்டவன்
எக்கணன் றானுக்கும் எந்தை பிரானே.

விளக்கம்:

பாடல் #1024 இல் உள்ளபடி மூன்று கண்களையுடைய இறைவனே உடலாகிய குண்டத்தில் எழும் முழுமையான சுடராகவும் இருக்கின்றான். அந்த மூன்று கண்களை உடைய இறைவனே எட்டுத் திசைகளுக்கும் கண்களை உடையவனாய் இருந்து எட்டுத் திசைளையும் கண்டு எல்லா உலகங்களையும் அதிலிருக்கும் உயிர்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு எல்லா தேவர்களுக்கும் தேவகணங்களுக்கும் தலைவனாகவும் இருப்பவனே எம்மையும் சேர்த்து அண்டசராசரங்களுக்கும் தந்தையாகவும் இருக்கின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.