பாடல் #1018

பாடல் #1018: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

கொண்டஇக் குண்டத்தின் உள்ளெழு சோதியால்
அண்டங்கள் ஈரேழு மாக்கி அழிக்கலாம்
பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம்
இன்றுசொல் நூலாய் எடுத்துஉரைத் தேனே.

விளக்கம்:

பாடல் #1017 இல் உள்ளபடி யாம் அறிந்து அடைந்த குண்டமாகிய எமது உடலுக்குள் இருந்து எழுந்த ஜோதியின் மூலமாக ஈரேழு அண்டங்களையும் உருவாக்கவும் செய்யலாம் அழிக்கவும் செய்யலாம். ஆதிகாலத்திலிருந்தே அருளப்பட்ட வேதங்களாகவும் பரந்து விரிந்து இருக்கும் உலகங்களாகவும் இருக்கும் அந்த ஜோதியை யாம் இன்று நூலாக கோர்த்து எடுத்துரைத்தோம்.

குறிப்பு: உயிர்கள் தமக்குள் மானசீகமாக அக்னியை வளர்த்து யாகம் செய்தால் உள்ளிருந்து எழுந்த ஜோதியின் தன்மைகளை அறிந்து கொள்ளாலாம்.

One thought on “பாடல் #1018

  1. Sridhar Reply

    இந்த உருவாக்கித் தந்தவரின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.