பாடல் #1024

பாடல் #1024: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

இடங்கொண்ட பாதம் எழிற்சுட ரேக
நடங்கொண்ட பாதங்கள் நன்னீ ரதற்குச்
சகங்கொண்ட கையிரண் டாறுந் தழைப்ப
முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே.

விளக்கம்:

பாடல் #1023 இல் உள்ளபடி உடலில் இருக்கும் முதுகுத்தண்டின் உச்சியை அடிப்பாகமாகக் கொண்டு எழும் சுடர் ஒரே ஜோதியாக அழகாக அசைந்தாடும். அப்போது அங்கிருந்து அமிர்தம் சுரந்து சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் தாமரை மலர்ந்து விரிவடையும். இந்த செழுமையான சுடர் முக்கண்களையுடைய இறைவனின் திருமுகமாக இருக்கிறது.

கருத்து: மானசீகமாக உடலைக் குண்டமாக பாவித்து இந்த யாகத்தை செய்தால் இறைவனின் மூன்றாவது கண்ணைக் குறிக்கும் பேரறிவு ஞானத்தை அடையலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.