பாடல் #1037

பாடல் #1037: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

மெய்கண்ட மாம்விரி நீருல கேழையும்
உய்கண்டஞ் செய்த வொருவனைச் சேருமின்
செய்கண்ட ஞானந் திருந்திய தேவர்கள்
பொய்கண்ட மில்லாப் பொருள்கலந் தாரே.

விளக்கம்:

இறைவனால் முறையாக வகுக்கப்பட்டு படைக்கப்பட்ட பரந்து விரிந்த கடல்களைக் கொண்ட ஏழு உலகங்கள் இருக்கின்றன. இந்த ஏழு உலகங்களிலுள்ள உயிர்களனைத்தும் முக்திபெற வேண்டும் என்ற கருணையினால் அவை முக்திபெறும் வழிமுறைகளையும் முறையாக இறைவன் வகுத்திருக்கின்றான். அவனை உயிர்கள் சென்று அடைந்தால் முறையாக வகுக்கப்பட்ட நவகுண்ட யாகத்தின் மூலம் கிடைக்கும் ஞானங்கள் அனைத்தும் அறிந்து உயிர்கள் தேவர்களாக உயர்ந்த நிலையை அடைவார்கள். அவ்வாறு உயர்ந்த தேவர்கள் பொய் முறைகளால் வகுக்கப்பட்ட எந்தவித மாயையும் இல்லாத உண்மையான மெய்ப்பொருளான சதாசிவமூர்த்தியோடு கலந்து இருப்பார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.