பாடல் #780

பாடல் #780: மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

காணலு மாகுங் கருதிய பத்தோடிற்
காணலு மாகுங் கலந்த இரண்டையும்
காணலு மாகுங் கலப்பற மூவைந்தேற்
காணலு மாகுங் கருத்துற ஒன்றே.

விளக்கம் :

மூச்சுக்காற்று பத்து நாள் இடைநாடி வழியே சென்றால் உயிர் உடலில் இரண்டு ஆண்டு கலந்து இருக்கும். மூச்சுக்காற்று பதினைந்து நாள் இடைநாடி வழியே சென்றால் வாழ்நாள் ஓர் ஆண்டு என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பாடல் #781

பாடல் #781: மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

கருதும் இருபதிற் காணஆ றாகும்
கருதிய ஐயைந்திற் காண்பது மூன்றாம்
கருதும் இருப துடன்ஆறு காணில்
கருதும் இரண்டெனக் காட்டலு மாமே.

விளக்கம்:

மூச்சுக்காற்று இருபது நாள் இடைநாடி வழியே இயங்கினால் வாழ்நாள் ஆறு மாதம் ஆகும். இருபத்தைந்து நாள் இயங்கினால் மூன்று மாதம் ஆகும். இருபத்தாறு நாள் இயங்கினால் இரண்டு மாதம் ஆகும்.

For one who has awakened in knowledge, there is no more suffering. For him every inch of this creation is filled with bliss, is a part of the Self. Jaya Moksha inspiration - check out my designs at etsy.com/shop/JayaMoksha - inspired by spiritual symbolism and tribal handicrafts ♥

பாடல் #782

பாடல் #782 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில்
காட்டலு மாகுங் கலந்தெழும் ஒன்றெனக்
காட்டலு மாகுங் கலந்திரு பத்தெட்டிற்
காட்டலு மாகுங் கலந்தஈ ரைந்தே.

விளக்கம் :

மூச்சுக்காற்று இருபத்தேழு நாள் இடகலைநாடி வழியே சென்றால் அதன்பிறகு ஒரு மாதம் வாழ்நாள் என்பதை மெய்ப்பித்துக் காட்டமுடியும். இருபத்தெட்டுநாள் சென்றால் அதன்பின் பத்து நாள்களே வாழ்நாள் என்று மெய்ப்பித்துக் காட்டமுடியும்.

பாடல் #783

பாடல் #783 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும்
பார்அஞ்சி நின்ற பகை பத்துநாள் ஆகும்
வாரம்செய் கின்ற வகை ஆறஞ்சு ஆமாகில்
ஓர்அஞ்சொடு ஒன்று ஒன்று என ஒன்றும்தானே.

விளக்கம்:

மூச்சுக்காற்று இடகலை நாடியின் வழியே 28 நாட்களுக்கு சென்றாலும் 29 நாட்களுக்கு சென்றாலும் அதன் பிறகு ஆயுள் பத்து நாட்களே ஆகும். ஆனால் 30 நாட்களுக்கு அவ்வாறு சென்றுவிட்டால் அதன் பிறகு ஆயுள் வெறும் ஏழு நாட்களே ஆகும்.

பாடல் #784

பாடல் #784 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத் தொன்றாகிற்
கன்றிய நாளுங் கருத்துற மூன்றாகுஞ்
சென்றுயிர் நாலெட்டுஞ் சேரவே நின்றிடின்
மன்றியல் பாகு மனையில் இரண்டே.

விளக்கம் :

மூச்சுக்காற்று இடகலை நாடி வழியாக முப்பத்தொரு நாள் சென்றால் வாழ்நாள் மூன்று நாட்கள் மட்டுமே. முப்பத்திரண்டு நாள் சென்றால் இரண்டு நாளில் அவ்வுயிர் உடலை விட்டுச்செல்லும். சென்றவுடன் அவர் வாழ்ந்த இல்லத்தில் பலர் கூடி ஒலிக்கின்ற இயல்பு தோன்றும்.

Shravan Maas or Sawan Month is faithfully devoted to Lord Shiva is meant to be his dearest and the closest month among all. Lord Shiva loves Mondays and always loves to be worshiped especially on Shravan Somvar. He has been revered by his avid devotees by observing this vrat with proper puja rituals and other sacred ceremonies, the entire month. In 2019, Shravan Maas falls on 18th July and ends on 15th August.

பாடல் #785

பாடல் #785 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

மனையில்ஒன் றாகும் மாதமு மூன்றுஞ்
சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி
வினையற வோங்கி வெளிசெய்து நின்றால்
தனையுற நின்ற தலைவனு மாமே.

விளக்கம் :

உயிர் முதலில் உடலோடு சேர்ந்து தாயின் வயிற்றில் ஒன்பது மாதம் உருப்பெற்று வளர்ந்து பத்தாம் மாதம் நீரில் மிதந்து பத்தாம் மாத இறுதியில் அவ்விடத்தை விட்டு திருவருள் உணர்வோடு வெளியே வந்து வினைகளை எல்லாம் தீர்த்து தான் யார் என்பதை உணர்ந்து நின்றால் உலகிற்கு தலைவனாகவும் கூடும் என்று நந்தி பெருமான் கூறியுள்ளார்.

பாடல் #786

பாடல் #786 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை
ஆரு மறியார் அளக்கின்ற வாயுவை
ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள்
ஆரு மறியா அறிவறிந் தேனே.

விளக்கம் :

உயிர் வாழ்தற்கும் வாழ்நாளை அளந்து அறிதற்கும் காரணமான கருவிகள் மூலாக்கினி பிராணவாயு இவற்றின் பெருமைகளை அறிகின்றவர் உலகில் எவரும் இல்லை. அதனால் அவற்றை யோகத்தின் மூலம் ஒழுங்குபட நிறுத்தாத காரணத்தில் விரைவில் உடலை விட்டு நீங்குகின்ற உயிரின் பெருமையையும் அறிகின்றவர் உலகில் எவரும் இல்லை. யாம் இறைவனின் திருவருளால் அவ்விரண்டையும் அறியப் பெற்றேன்.

Original Classical mythology Photography by Kiran Joshi | Art Deco Art on Canvas | Linga of Lord Shiva - Limited Edition 5 of 5

பாடல் #787

பாடல் #787 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

அறிவது வாயுவொ டைந்தறி வாய
அறிவா வதுதான் உலகுயி ரத்தின்
பிறிவுசெய் யாவகை பேணிஉள் நாடிற்
செறிவது நின்று திகழு மதுவே.

விளக்கம் :

பிராணவாயுவின் இயக்கத்தை அறிந்து கொண்டால் நிலையாக இருக்கும் ஐம்பொறிகளாகிய 1. பார்த்தல் 2. கேட்டல் 3. தொடுஉணர்ச்சி 4. சுவை 5. முகர்தல் என்று சொல்லப்படுவது எதுவோ அதுவே, உலகில் உயிர் என்று அறியப்படும், அவ்வுயிர் உலகினின்றும் பிரிந்து போகாதவாறு அதற்குரிய முறைகளை அறிந்து, அந்த வழியிலே உயிரை பேணிக் காத்தால் உயிர் உடம்பில் நிலைபெற்று இருக்கும்.

பாடல் #788

பாடல் #788 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

அதுவரு ளும்மரு ளான துலகம்
பொதுவரு ளும்புக ழாளர்க்கு நாளும்
மதுவரு ளும்மலர் மங்கையர் செல்வி
இதுவருள் செய்யும் இறைஅவ னாமே.

விளக்கம் :

சிவம் அருளிச்செய்த இவ்வுலகத்தில் அனைத்து உயிர்க்கும் பொதுவாக உலக இன்பத்தையும் உயர்ந்தோர்க்கு சிறப்பாக பேரின்பத்தை தந்து சிவானந்தத் தேனாகிய சக்தியை கொடுத்து ஆயுளை அதிகரித்து அருளைப்புரிவது இறைவனே.

Of the three gods of the Hindu trinity, Shiva is the most commonly worshipped in India today, Vishnu being the second, and Brahma the third. The origins of Shiva are found in a pre-Aryan fertility god and also in a fierce deity of the Vedas called Rudra.

பாடல் #789

பாடல் #789 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
குறிப்பது கூடிய கோலக் குரம்பைப்
பழப்பதி யாவது பற்றறும் பாசம்
அழப்படி செய்வார்க் ககலும் மதியே.

விளக்கம் :

உயிர்கள் பிறத்தல் வேண்டும் என நந்தி திருவுள்ளக் குறிப்புக் கொண்டருளினன். அக்குறிப்பினால் மாயையால் இவ்வுடம்பு உயிர்களுக்கு அமைந்தது. இவ்வுடல் தொன்று தொட்டு தொடர்ந்து வருவது பாசம் என்னும் பற்று அறுப்பதற்க்கான கருவியாக உள்ளது. இந்த அழகிய உடல் பிஞ்சு, காய், செங்காய் என்று ஆகி முடிவில் பழமாய்ப் பழுத்து விழுந்து அழிந்து விடும். விழுவதற்குள் பாசங்களில் ஆழ்ந்து போகாமல் பாசங்களை விலகும்படி செய்து அதற்குரிய முறைகளில் பழகினால் பாசம் விலகி மெய்யுணர்வு பெருகி ஞானம் மிகும்.