பாடல் #789

பாடல் #789 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
குறிப்பது கூடிய கோலக் குரம்பைப்
பழப்பதி யாவது பற்றறும் பாசம்
அழப்படி செய்வார்க் ககலும் மதியே.

விளக்கம் :

உயிர்கள் பிறத்தல் வேண்டும் என நந்தி திருவுள்ளக் குறிப்புக் கொண்டருளினன். அக்குறிப்பினால் மாயையால் இவ்வுடம்பு உயிர்களுக்கு அமைந்தது. இவ்வுடல் தொன்று தொட்டு தொடர்ந்து வருவது பாசம் என்னும் பற்று அறுப்பதற்க்கான கருவியாக உள்ளது. இந்த அழகிய உடல் பிஞ்சு, காய், செங்காய் என்று ஆகி முடிவில் பழமாய்ப் பழுத்து விழுந்து அழிந்து விடும். விழுவதற்குள் பாசங்களில் ஆழ்ந்து போகாமல் பாசங்களை விலகும்படி செய்து அதற்குரிய முறைகளில் பழகினால் பாசம் விலகி மெய்யுணர்வு பெருகி ஞானம் மிகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.