பாடல் #779

பாடல் #779 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

அளக்கும் வகைநாலும் அவ்வழியே ஓடில்
விளக்கும் ஒருநாலு மெய்ப்பட நிற்கும்
துளக்கும் வகையைந்துந் தூய்நெறி ஓடில்
களக்க மறமூன்றிற் காணலு மாமே.

விளக்கம் :

வாழ்நாளை அளந்தது தெரிந்து கொள்ளும் வகையில் நான்கு நாள்கள் பிராணவாயு இடைகலை வழியே இயங்கினால் நான்கு ஆண்டுகள் உயிர் உடலில் இருக்கும். ஐந்து நாள் அவ்வாறு இயங்கினால் தெளிவாக மூன்றாண்டு உயிர் உடலில் இருக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.