பாடல் #907

பாடல் #907: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

பொற்பாதம் காணலாம் புத்திர ருண்டாகும்
பொற்பாதத் தாணையே செம்புபொன் னாயிடும்
பொற்பாதங் காணத் திருமேனி யாயிடும்
பொற்பாத நன்னடஞ் சிந்தனை சொல்லுமே.

விளக்கம்:

பாடல் #906 இல் உள்ளபடி சாதகர்களின் உடம்பே இறைவனின் பொன்னான பாதங்களாக மாறிய பிறகு இறைவனும் தானும் வேறில்லை எனும் ஞானம் கிடைக்கும். இறைவனின் திருவடி மேல் ஆணையாக செம்பு போன்ற உடல் பொன் போன்ற ஒளி உடம்பாகும். இறைவனின் திருவடிகளை தமக்குள் தரிசிக்க இறைவனின் திருஉருவமே தாமாக உணரலாம். அவ்வாறு தரிசித்த சாதகர்களுக்கு பேரறிவு ஞானம் அடையும் வழிகள் சிந்தனையாக கிடைக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.