பாடல் #901

பாடல் #901: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

தானே தனக்குத் தகுநட்டந் தானாகும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானே ரீங்காரத்து தத்துவக் கூத்துக்குத்
தானே உலகில் தனிநடனந் தானே.

விளக்கம்:

உலகில் இறைவன் ஆடுகின்ற திருக்கூத்து தாண்டவங்களுக்கு தகுந்த தாளமாகவும் தாள மந்திரமான ஓங்காரத்தில் அகார உகாரமாகவும் தாளங்களின் ஓசையாகவும் தாண்டவ நடனமாகவும் இறைவன் ஒருவனே இருக்கின்றான்.

குறிப்பு: இறைவனின் தாண்டவங்களில் எதுவாகவெல்லாம் அவனே இருக்கின்றான் என்பதை இப்பாடலில் அறியலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.