பாடல் #888

பாடல் #888: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

தாண்டவ மான தனியெழுத் தோரெழுத்
தாண்டவ மான தனுக்கிர கத்தொழில்
தாண்டவக் கூத்துத் தனிநின்ற தற்பரந்
தாண்டவக் கூத்துத் தமனியத்திற் தானே.

விளக்கம்:

ஈடு இணையில்லாத தனியெழுத்தான ஓம் என்கிற பிரணவ மந்திரமே இறைவன் ஆடும் தாண்டவத் திருக்கூத்து ஆகும். அந்த தாண்டவமாக இருப்பது அனைத்து உயிர்களுக்கும் மாபெருங்கருணையில் அருள்புரியும் இறைவனது அருளல் தொழிலாகும். தாண்டவத் திருக்கூத்து ஆதியும் அந்தமுமின்றி தனித்து நிற்கும் இறைவனின் தன்மை ஆகவும் இருக்கிறது. இந்தத் தாண்டவத் திருக்கூத்துதான் தில்லையில் பொன்னம்பலத்தில் எப்போதும் நடந்துகொண்டு இருக்கின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.