பாடல் # 815 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)
பொழிந்த இருவெள்ளி பொன்மண் ணடையில்
வழிந்துள் ளிருந்தது வான்முத லங்குக்
கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக்
கொழுந்தது வாகுங் குணமது தானே.
விளக்கம்:
திருவருளால் உடம்பில் உள்ள வெண்ணிறமான அமிர்தம் பொன்நிறமான மண்போல் இருக்கும் மூலத்திடம் சேர்ந்தால் அங்குப் பெருகி வழிந்து நிறைந்திருந்து உடம்புக்கு உறுதி தரும். ஐம்பூதங்களால் ஆன உடம்பில் கழிவுகள் ஏற்பாடாது. இது போல் உடம்பை காக்க வல்லவர்களுக்கு உடம்பு இளமையுடன் கொழுந்து போல் என்றும் பொலிவுடன் இருக்கும்.
