பாடல் # 818

பாடல் # 818 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

மண்டலத் துள்ளே மனவொட்டி யாணத்தைக்
கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப்
பண்டகத் துள்ளே பகலே ஒளியாகக்
குண்டலக் காதனுங் கூத்தொழிந் தானே.

விளக்கம் :

ஞான எண்ணத்துள் மனம் ஒடுங்கும் நிலை உள்ளதை உணர்ந்து கேசரி யோகத்தின் மூலம் கீழே செல்ல விடாமல் வைத்தால் உடம்பில் பகலில் உள்ள ஒளி போல குண்டலம் அணிந்த சிவபெருமான் தன் ஐந்தொழில்களை விட்டு அசைவின்றி அங்கே இருப்பான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.