பாடல் #707

பாடல் #707: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருக்கின்ற நகரறி வாரே.

விளக்கம்:

இறைவனைக் காண வேண்டுமென்று ஓயாமல் அலைகள் அடித்துக் கொண்டிருக்கும் கடல்கள் சூழ்ந்த இந்த உலகம் முழுவதையும் தனது பாதங்கள் வலிக்கும் வரை நடந்து தேடினாலும் ஒரு பயனும் இருக்காது. பார்க்கும் அனைத்தையும் இறைவனாக பார்த்து அந்த இறைவன் மீது உண்மையான அன்பை செலுத்துபவர்கள் சித்திகளை அடைந்து தமது உள்ளமாகிய திருக்கோயிலேயே இறைவன் வீற்றிருக்கின்றான் என்பதை அறிந்து கொள்வர்கள்.

கருத்து: இறைவனை வெளியில் எங்கு தேடினாலும் காண முடியாது. உண்மையான அன்பால் தேடினால் கண்டு கொள்ளலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.