பாடல் #687

பாடல் #687: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

தண்மைய தாகத் தழைத்த கலையினுள்
பண்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை
வன்மைய தாக மறித்திடில் ஓராண்டின்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் காணுமே.

விளக்கம்:

புருவ மத்தியிலுள்ள குளிர்ச்சியான ஆக்ஞா சக்கரத்தின் பேரறிவின் மூலம் உடலெங்கும் பலவாறாக வியாபித்திருக்கின்ற ஐம்பூதங்களையும் கடினப்பட்டு கட்டுப்படுத்தி ஓராண்டு வைத்திருந்தால் அனைத்திற்கும் மேலான உண்மைப் பொருளாகிய சதாசிவத்தை உணரலாம்.

கருத்து: பேரறிவின் மூலம் உடலிலுள்ள ஐம்பூதங்களையும் கட்டுப்படுத்தி ஓராண்டு வைத்திருந்தால் உண்மைப் பொருளை உணரலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.