பாடல் #65

பாடல் #65: பாயிரம் – 3. ஆகமச் சிறப்பு

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரிய மும்தமி ழும்உட னேசொல்லிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.

விளக்கம்:

மழைக்காலம் கோடைக்காலம் பனி பெய்யும் குளிர்காலம் என எல்லாக் காலமும் ஏரிகளெல்லாம் நீர்வற்றி அனைத்தும் யுகங்களின் முடிவான ஊழிக்காலத்தில் அழியும். ஆரிய மொழியாகிய சமஸ்கிருதத்திலும் தமிழிலும் வேதங்களையும் ஆகமங்களையும் புதுயுகத்தில் பிறக்கும் உயிர்களின் தாயான உமாதேவிக்கு அந்த உயிர்கள் இறைவனை அடையும் பொருட்டு உடனே வழங்கி இறைவன் மாபெரும் கருணை செய்தான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.