பாடல் #66

பாடல் #66: பாயிரம் – 3. ஆகமச் சிறப்பு

அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறும்
சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே.

விளக்கம்:

மும்மலங்கள் உயிர்களைவிட்டு விலகுகின்ற முறையையும் மும்மலங்கள் உயிர்களைக் கட்டிப்போடும் முறையையும் பந்தபாசத்தால் பிறந்த இந்த உடலைவிட்டு உயிர் பிரிந்து போகும் முறையையும் இன்னும் பலவற்றை ஆகமங்கள் கூறுகின்றன. தமிழ் மொழி சமஸ்கிருத மொழி ஆகிய இரண்டு மொழியிலும் ஆகமங்கள் கூறி உணர்த்தும் ஒரே உண்மை இறைவன் வழங்கிய ஆகமங்களை அவன் அருளாலேயே ஞானம் பெற்று உணர வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.