பாடல் #594

பாடல் #594: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)

வாழலு மாம்பல காலும் மனத்திடைப்
போழ்கின்ற வாயு புறம்படாப் பாய்ச்சுறில்
ஏழுசா லேகம் இரண்டு பெருவாய்தல்
பாழி பெரியதோர் பள்ளி அறையிலே.

விளக்கம்:

உள்ளிழுத்த மூச்சுக்காற்றை வெளியே விட்டுவிடாமல் மனதை ஒருமுகப்படுத்தி சுழுமுனை வழியாக அந்த மூச்சுக்காற்றை மேலே ஏற்றி தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டால் ஒன்பது துவாரங்களைக் கொண்ட இந்த உடம்பில் நீண்ட காலம் அழியாமல் பேரானந்த நிலையில் இருக்கலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.