பாடல் #596: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)
முன்னமே வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னையும் வந்தவர்க் கென்ன பிரமாணம்
முன்னூறு கோடி உறுகதி பேசிடில்
என்ன மாயம் இடிகரையும் நிற்குமே.
விளக்கம்:
நமக்கு முன்பு வந்தவர்களெல்லாம் மனதை ஒருமுகப்படுத்தி நிலைத்து வைக்காமல் இறந்து போய்விட்டார்கள். பின்பு பிறந்த நாமும் அவ்வாறே மனதை ஒருமுகப்படுத்தாமல் அழிந்து விடுவோம் என்பது நிச்சயம் இல்லை. முன்பு வந்த முன்னூறு கோடி மனிதர்களும் அடைந்த கதியைப் பற்றிப் பேசி ஒரு பயனும் இல்லை. மனதை ஒருமுகப்படுத்தி நிலைத்து வைத்தால் அழியக்கூடியதாக இருக்கும் இந்த உடல் அழியாததாக மாற்ற முடியும்.
![](https://i0.wp.com/www.kvnthirumoolar.com/wp-content/uploads/2019/10/om-namo-shivai-durga-puja-goddess-lakshmi-om-namah-E6ba4198b810deb727a447ac5bdf350c6.jpg?resize=638%2C960&ssl=1)