பாடல் #404: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)
ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉட லோடுயிர் தானே.
விளக்கம்:
ஏழு உலகங்களையும் படைக்கின்ற பிரம்மனாகவும் ஏழு உலகங்களையும் காக்கின்ற திருமாலாகவும் ஏழு உலகங்களையும் அழிக்கின்ற சிவபெருமானாகவும் இருப்பவன் இறைவன் ஒருவனே. சதாசிவமூர்த்தியாக இருந்து ஒவ்வொரு உயிரின் உடலோடு உயிராக கலந்து இருப்பவனும் இறைவன் ஒருவனே.
