பாடல் #331

பாடல் #331: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கற ஆனந்தத் தேறல் பருகார்
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்
திராப்பகல் மாயை இரண்டிடத் தேனே.

விளக்கம்:

இரவு பகல் என்று தெரியாமல் எந்த சிந்தனையும் எண்ணங்கள் அற்று உடலாலும் உள்ளத்தாலும் மற்றும் உலக பந்தங்கள் என்று எதனாலும் பாதிக்காமல் தன்னை மறந்த நிலையில் இருந்தால் தனக்குள் உண்டாகும் பேரானந்த சிவானந்ததேனை உலகத்தார் அருந்தாலாம். ஆனால் உயிர்கள் மதுவை குடித்து வீணாக அழிகின்றனர். எதனாலும் பாதிக்காத இறைவனின் திருவடிகளைப் பற்றினால் இறைவனே கொடுக்கும் சுத்த மாயையும் பந்த பாச ஆசைகளினால் வரும் அசுத்த மாயையையும் அறுந்து தனக்குள் உண்டாகும் பேரானந்த சிவானந்ததேனை அருந்தலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.