பாடல் #325

பாடல் #325: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

சித்தம் உருக்கிச் சிவமாம் சமாதியில்
ஒத்த சிவானந்தம் ஓவாத தேறலைச்
சுத்த மதுவுண்ணச் சுவானந்தம் விட்டு
நித்தல் இருத்தல் கிடத்தல்கீழ்மைக் காலே.

விளக்கம்:

உயிர்கள் வெளியுலக எண்ணங்களை முழுமையாக நீக்கிவிட்டு இறைவனின் மேல் சிந்தனையை வைத்து யோகத்தில் சிவமாக இருக்கும் சமாதி நிலையில் குண்டலினி சக்தியை சுழுமுனை நாடி வழியே மேலேற்றி சகஸ்ரரதளத்தில் சேர்த்தால் அங்கே ஊறும் மிகவும் தூய்மையான அமிர்தத்தைப் பருகி பேரானந்தத்திலேயே இருப்பதை விட்டுவிட்டு புத்தியை மயக்கும் உலக மதுவை பருகி அந்த மயக்கத்தில் இருப்பதும் சுய நினைவின்றி மயங்கிக் கிடப்பதும் உயிர்களை இழிவு நிலைக்கு அழைத்துச் செல்லும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.