பாடல் #330

பாடல் #330: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

மயக்கும் தியங்குங்கள் வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி
முயங்கும் நயங்கொண்ட ஞானத்து முந்தி
இயங்கும் இடையறா ஆனந்தம் எய்தே.

விளக்கம்:

மதுவானது குடிப்பவரின் புத்தியில் தடுமாற்றத்தையும் மனச்சஞ்சலத்தையும் ஏற்படுத்தும். உண்மை பேசுவதை தடுத்து பொய் பேச வைக்கும். மது அருந்துபவர்கள் இன்பத்துக்காக பொதுமகளிரை நாடி அவர்களிடம் மயங்கி இருப்பார்கள். இவர்களுக்கு நல்லறிவைக் கொடுக்கும் உண்மை ஞானத்தினால் கிடைக்கும் பேரானந்தம் ஒரு போதும் கிடைக்காது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.