பாடல் #317

பாடல் #317: முதல் தந்திரம் – 22. கல்லாமை (கல்வி கற்று உண்மை ஞானம் இல்லாமை)

கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடனன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்துஅறி யாரே.

விளக்கம்:

உண்மையான ஞானத்தைக் கற்று அறியாத மூடர்களை சென்று பார்ப்பது நமக்கு நல்லது இல்லை. அவர்கள் சொல்லுவதைக் கேட்டே ஆகவேண்டும் என்கிற கடமையும் நமக்கு இல்லை. உண்மையான ஞானத்தை கற்று அறியாத மூடர்களுக்கு தம்மைப் போலவே கற்று அறியாத மற்ற மூடர்களை நல்லவர்கள் என்று சொல்வார்கள். கல்லாத மூடர்க்கு எந்த கருத்தையும் அறிந்து கொள்ளும் திறன் கிடையாது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.