பாடல் #313

பாடல் #313: முதல் தந்திரம் – 22. கல்லாமை (கல்வி கற்று உண்மை ஞானம் இல்லாமை)

கில்லேன் வினைத்துயர் ஆக்கு மயலானேன்
கல்லேன் அரன்நெறி அறியா தகையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள்
கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே.

விளக்கம்:

சிவநெறியைக் கல்லாமல் இறைவுணர்வை அறிய ஆற்றல் இல்லாத உயிர்கள் மாயையில் மயங்கி வினைப் பயனால் கிடக்கும் துன்பங்களை மேலும் மேலும் உருவாக்கி அனுபவித்துக் கொண்டே இருக்கின்றார்கள். உலகத்தில் இருக்கும் அனைத்து பொருள்களையும் கொடுத்து அப்பொருளாகவே இருக்கும் இறைவன் தனக்குள்ளும் இருக்கின்றான் என்று தெரியாமல் நாட்களை வீணாகக் கழித்துக்கொண்டு உலக இன்பங்களிலேயே இருந்து ஆடிக்கொண்டிருக்கின்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.