பாடல் #319

பாடல் #319: முதல் தந்திரம் – 22. கல்லாமை (கல்வி கற்று உண்மை ஞானம் இல்லாமை)

ஆதிப் பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
ஓதி உணரவல் லோமென்பர் உள்நின்ற
சோதி நடத்துந் தொடர்வுஅறி யாரே.

விளக்கம்:

பிறப்பு இறப்பு இல்லாத தேவர்களுக்கு இறைவனாகவும் அண்டங்கள் முழுவதும் பரவி ஜோதியாக ஆதியிலிருந்தே இருக்கும் இறைவனை உணர்ந்த அடியவர்கள் இறைவன் கூறிய வழியிலையே தொடர்ந்து சென்று இறுதியில் அடையும் பெருந்தெய்வமாக இருக்கும் இறைவனை உலகக் கல்வியை படித்து உணர்ந்து விடமுடியும் என்று கூறுபவர்கள் தமக்குள் ஜோதி வடிவாக நின்றுகொண்டு தம்மை வழி நடத்துபவனும் உயிரை உடலோடு தொடர்ந்து வைத்திருப்பவனும் அவனே எனும் உண்மை அறியாதவர்கள் ஆவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.