பாடல் #27

பாடல் #27: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

சந்தி எனத்தக்க தாமரை வான்முகத்து
அந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியின் உள்ளே புகுந்துநின் றானே.

விளக்கம்:

சூரியன் மறையும் மாலை நேரத்தில் தெரியும் வானத்தின் நிறம் போன்ற செந்தாமரை மலர் விரிந்து தெரியும் அழகைப் போன்ற முகத்தை உடையவரும் முடிவென்பதே இல்லாதவருமான எம்பெருமான் சதாசிவமூர்த்தியின் அருள் தமக்கே வேண்டும் என்று பக்தியோடு தம்முடைய குருவை நாளும் வணங்கி வருபவர்களின் எண்ணத்தில் இறைவன் உறைந்து இருக்கின்றான்.

2 thoughts on “பாடல் #27

  1. Murali Shankar Reply

    அற்புதம் மிக்க நன்றி

Leave a Reply to Balachandran GobichettipalayamCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.