பாடல் #45

பாடல் #45: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

விதிவழி அல்லதிவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவன் ஆமே.

விளக்கம்:

கர்ம விதிப்படியே இந்த உலகம் இயங்குகின்றதே அன்றி வேறில்லை. உயிர்கள் பெறும் இன்பமும் துன்பமும் அவரவர்களின் கர்ம விதிப்படியே இருக்குமேயன்றி மாறி இருப்பதில்லை. இருப்பினும் முக்தியடைய வேண்டும் என்கிற எண்ணத்தில் இறைவனை தினமும் வணங்கித் துதித்து வரும் உயிர்களுக்கு அவர்களின் கர்ம விதிகளை அகற்ற சூரியன் போல் ஒளியாய் வந்து இறைவன் முக்திபெறும் வழியைக் காட்டி அருள்வான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.