பாடல் #32

பாடல் #32: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்
மேவு பிரான்விரி நீர்உல கேழையும்
தாவு பிரான்தன்மை தானறி வார்இல்லை
பாவு பிரான்அருள் பாடலும் ஆமே.

விளக்கம்:

தேவர்களுக்கெல்லாம் தலைவனாக தேவர்களோடு கலந்து இருப்பவனும் நமக்கும் தலைவனாக நம்மோடு கலந்து இருப்பவனும் பத்து திசைகளிலும் (எட்டுத்திசைகள் மற்றும் ஆகாயம் பூமி ஆகியவை) பரவி இருப்பவனும் பெரும் கடலால் சூழப்பட்டுள்ள ஏழு உலகங்களையும் தாண்டி இருப்பவனுமாகிய எம்பெருமான் சதாசிவமூர்த்தியின் தன்மை என்னவென்பதை யாரும் அறிந்துகொள்ளவில்லை. எங்கும் எதிலும் பரந்து நிறைந்து இருக்கும் அந்தப் பரம்பொருளின் அருளைப் பற்றியே யாம் பாடுகின்றோம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.