பாடல் #258

பாடல் #258: முதல் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (தரும வழியில் நிற்பவர்களின் பெருமை)

திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும்அக் கேடில் புகழோன்
விளைக்குந் தவம்அறம் மேற்றுணை யாமே.

விளக்கம்:

வினையின் பயனால் மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவியானது ஒரு பெரும் கடல் போன்றது. இந்த வினை அவ்வளவு சீக்கிரத்தில் தீர்ந்துவிடுவதில்லை. இந்த வினையாகிய பிறவிக்கடலை நீந்திச் சென்று இறைவனை அடையும் வரை சோர்வு வராமல் இருக்க இரண்டு வழிகள் உண்டு. அற வழிகளும் தவ வழிகளும்தான் அந்த இரண்டு வழிகள். அறத்தை கடைபிடிப்பவர்களுக்கும் அவரை பின்பற்றுபவர்களுக்கும் பிறவியில்லாத மேன்மையான முக்திக்கு வழிகாட்டி துணையாக இருப்பான் தூய்மையான புகழுடைய இறைவன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.