பாடல் #256

பாடல் #256: முதல் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (தரும வழியில் நிற்பவர்களின் பெருமை)

துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறி யாரே.

விளக்கம்:

உலகப் பற்றுக்களை விட்ட ஞானியர்கள் செல்லும் வழியில் அவர்களின் சுற்றத்தார் உறவினர் என்று யாரும் இருப்பதில்லை. அறம் அறிந்த ஞானிகளுக்கு அறத்தின் அளவுகள் தெரியாது. அறம் செய்யாமல் வாழ்ந்தவன் இறந்து செல்லும் வழியில் எந்தவொரு இன்பமும் அவனுக்கு கிடைப்பதில்லை. அறத்தை மறந்து வாழ்ந்தவன் இறந்து செல்லும் வழியில் துணையாக சிவபெருமான் வரமாட்டான்.

குறிப்பு: உலகப் பற்றுக்களை விட்டு அறத்தை அறிந்த ஞானியர்களுக்கே அறத்தின் அளவுகள் தெரியாது என்றால் அறம் என்பது எவ்வளவு பெரியது? அந்த அறத்தை அறிந்து வாழ்நாள் முழுவதும் செய்தால் இறைவனே துணையாக வருவான் என்றால் அறம் எந்த அளவு உயர்ந்தது என்பதை எண்ணி அறத்தின் வழியே வழியே நடந்து செல்லுங்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.